Sunday, May 10, 2009

சபிக்கப்பட்டவர்கள்

சாபம்-
விமோசனமே எழுதப்படாத சாபம்
யாரோ கொண்ட மோகத்துக்கு
யார்க்கோ வந்த சாபம்
யாரோ செய்த லீலைக்கு
யார்க்கோ இட்ட சாபம்
புலனின் தவத்துக்கு
வரமாய் வந்த சாபம்
இருட்டறையின் புழுக்கத்தில்
இரண்டு பேர் இறக்கிய சுமையை
இன்னொருவர் மீது ஏற்றிய சாபம்
சபிக்க மட்டுமே தெரிந்த, எங்கள்
'கடவுளின்' கருவறையில்
வரத்துக்காகத் தவமிருந்து
வயிற்றில் சுமந்த சாபம்
பாரத்தை ஏற்றியவர்களுக்கு
பாரத்தைச் சுமந்து கொண்டவர்களின்
நன்றி என்னத்துக்கு?
மறுபடியும் பழைய கதை:
யாரையோ வஞ்சம் தீர்க்க
மீண்டும் இவர்கள் பங்குக்கு
புதிய பாரங்கள்
புதிய ஆத்மாக்களின் முதுகிலேறும்
காலம் காலமாய்ச்
சபிக்கப்பட்டவர்களின் தொகை
இப்படித்தான்
சங்கிலித்தொடராய் நீளும்.

No comments:

Post a Comment